முகப்பு
தற்போதைய செய்திகள்

மகன் உடல் நிலை சரியில்லாததால் தந்தை தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாராதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா(28). இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், முத்துக்குமார்(4) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகனுக்கு அடிக்கடி உடல்

Updated On : 6 ஜூலை, 2013 at 3:55 PM
பகிர்:

விருதுநகரில் மகன் உடல் நிலை அடிக்கடி சரியில்லாததால் மனம் வெறுத்த தந்தை தூக்கிட்டு உயிரிழந்தார்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி பாராதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா(28). இவருக்கு அனுசுயா என்ற மனைவியும், முத்துக்குமார்(4) என்ற குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகனுக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கடந்த 3-ம் தேதி மருத்துவமனைக்கு வந்து மகனின் நிலை குறித்து மனைவியிடம் கேட்டறி்ந்து வீட்டிற்குச் சென்றாராம்.

இந்நிலையில் அனுசுயா குழந்தைக்கு சிகிச்சை முடிந்ததும் இன்று வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டை திறந்து பார்க்கையில் தனது கணவர் தூக்கிட்டு உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.