சேது திட்டத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கறுப்புக் கொடி
சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தூத்துக்குடி கடற்கரையோர பகுத
சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் திரேஸ்புரம் பகுதியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தூத்துக்குடி கடற்கரையோர பகுதியில் கறுப்புக்கொடி ஏற்றி மீனவர்கள் பகுதியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் கறுப்புக் கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் அதன் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.