கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பட சி.டிக்கள் விற்றவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம்
தற்போதைய செய்திகள்கும்மிடிப்பூண்டி அருகே புதுப்பட சி.டிக்கள் விற்றவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம்
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் கடிகாரம் விற்பனை செய்யும் கடையில் புதுப்பட சி.டிக்களையும் விற்பனை செய்து வந்தவர் செவ்வாய்க்கிழமை ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் அல்லாபிச்சை மகன் நாகூர் உசேன்(23). இவர் எளாவூர் சுண்ணாம்புகுளம் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். வீட்டின் முன்பக்கம் சிறிய கடையை நடத்தி வருகிறார். அந்த கடையில் கடிகாரம், கண்கண்ணாடி, பள்ளி மாணவர்களுக்கான பைகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது கடையில் தமிழ் புதுப்படங்கள் மற்றும் பழைய படங்கள் அடங்கிய சி.டி-க்களை விற்பனை செய்து வருவதாக ஆரம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆரம்பாக்கம் போலீஸார் மேற்கண்ட கடைக்கு வந்து சோதனை நடத்தியதில் அங்கு தமிழ் புதுப்பட சி.டிக்கள் 20 இருந்தது கண்டறிந்து அவைகள் கைப்பற்றப்பட்டது,
தொடர்ந்து அந்த கடை உரிமையாளர் நாகூர் பாஷா ஆரம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.