சாத்தூர் அருகே 2000 போலி குளிர்பான பாட்டில்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிய தகவல் இல்லாமல் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2000 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உரிய தகவல் இல்லாமல் அனுமதியின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 2000 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக் குமார் தலைமையில் இன்று சாத்தூர் தாயில்பட்டியில் குட்கா பான்மசாலா புகையிலைப் பொருள்கள் அனுமதியின்றி விற்பனை செய்ப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் , கடைகளில் சோதனையிட்டு வந்தபோது, அந்த வழியாகச் சென்ற லாரியில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட பாட்டில்கள்
தயாரிப்பு இடம் தேதி எதுவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்தனர். இவை பின்னர் உரிய சோதனைக்கு அனுப்பப் பட்டது. இது தொடர்பாக ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
Advertisement