கேரள மாநிலத்துக்கு செல்லும் லாரிகள் வேலை நிறுத்தம்
வரும் 20ம் தேதி முதல் கேரள மாநிலத்துக்குச் செல்லும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
வரும் 20ம் தேதி முதல் கேரள மாநிலத்துக்குச் செல்லும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகனங்களை சோதனை செய்ய கேரள மாநிலத்தில் மொத்தம் 8 சோதனைச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு வாழையாறு தான் முக்கிய சோதனைச் சாவடியாகும்.
அங்கு, லாரிகள் அனுமதி பெற 10 மணி நேரம் முதல் 32 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை சென்று சேர்க்க முடியவில்லை. மேலும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
Advertisement
இது குறித்து கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் பல முறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் வாழையாறு வழியாக சுமார் 2500 லாரிகள் இயக்கப்படுகிறது. ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தால், ஒரு நாளைக்கு ரூ.200 கோடி பொருட்கள் தேக்கமடையும்.
இந்த பிரச்னை சரி செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.