முகப்பு
தற்போதைய செய்திகள்

கான்கிரீட் தளம் இடிந்து விழுந்து இளைஞர் பலி

கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:50 PM
பகிர்:

கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

பண்ருட்டியை அடுத்த கந்தரக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் அய்யனார். இவர் சென்ட்ரிங் போடும் வேலை செய்து வந்தார்.

கந்தரக்கோட்டையில் ராமலிங்கம் என்பவரது வீட்டில் போர்டிகோவில் அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங்கை புதன்கிழமை மதியம் பிரிக்கும் போது அந்த காங்கிரீட் தளம் இடிந்து விழுந்தது.

இதில், அய்யனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உடனடியாக அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இது குறித்து புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →