பேச்சுவார்த்தையில் முடிவு : நாகை மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாகப்பட்டினம் மீனவர் கடந்த 5 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
நாகை மீனவர்கள் கடந்த 11ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தபோது, வலைகளை இலங்கைக் கடற்படையினர் மற்றும் சிங்கள மீனவர்கள் பறித்துச் சென்றனர். இதனைக் கண்டித்தும், மத்திய அரசு மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரியும், கடந்த ஜூலை 12ம் தேதி முதல் நாகை தாலுகா மீனவர்கள் (8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள்) தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் புதன்கிழமை இன்று வாபஸ் பெறப்பட்டது.
இந்திய கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவ சங்க நிர்வாகிகள், நாகை மீனவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து, நாகை மீனவர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.