நாகை.யில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: தேமுதிகவினர் 150 பேர் கைது
நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் இன்று காலை தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள அவுரித் திடலில் இன்று காலை தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேமுதிகவினர் மீது பொய் வழக்குகள் போடுவதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெறவில்லை என்று கூறி போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
தேமுதிக மாவட்டச் செயலர் அனீஸ் பாண்டியன் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.