மதுரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை
தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரின் மரணத்தை அடுத்து,
தூத்துக்குடிக்கு பள்ளிச் சுற்றுலா சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேரின் மரணத்தை அடுத்து, இன்று பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதை அடுத்து, பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.