முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

தேனியில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 19 ஜூலை, 2013 at 11:20 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:22 PM

தேனியில் பெண்ணிடம் தகராறு செய்து தாக்கியதாக ஒருவரை வெள்ளிக்கிழமை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

      தேனி அல்லிநகரம், காந்திநகரைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் தேனி, அரசு மருத்துவமனை தெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). கார்த்திக்குமாரின் வீட்டுக்கு வேலை நிமித்தமாக அடிக்கடி சென்று வரும் வழக்கமுள்ள கார்த்திக், வெள்ளிக்கிழமை கார்த்திக்குமாரின் வீட்டு முன் இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துக் கொண்டு, கார்திக்குமாரின் மனைவி வித்யாவை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்தாராம்.

      இதற்கு மறுத்ததால், கார்த்திக் தன்னுடன் தகராறு செய்து தாக்கியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல் சார்பு ஆய்வாளர் சீனிவாசன் வழக்கு பதிந்து கார்த்திக்கை கைது செய்தார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.