மிரட்டல் புகாரில் ஒருவர் கைது
தேனியில் அந்தரங்க காட்சியை பதிவு செய்து வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச் செயலரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனியில் அந்தரங்க காட்சியை பதிவு செய்து வைத்திருந்த செல்போனை திருடிக் கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணைச் செயலரை வெள்ளிக்கிழமை தேனி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி, அரசு மருத்துவமனைதெருவைச் சேர்ந்த ராஜூசெட்டியார் மகன் கார்த்திக்(30). இவர், ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தை தனது செல் போனில் பதிவு செய்து வைத்திருந்தாராம். இந்த செல்போனை தேனி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலர் அல்லிநகரத்தைச் சேர்ந்த வீரதெய்வம்(25) திருடி வைத்துக் கொண்டு, தன்னை மிரட்டி ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டதாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் செல்லத்தம்பி உடந்தையாக இருந்ததாகவும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், வீரதெய்வம், செல்லத்தம்பி ஆகியோர் மீது அல்லிநகரம் காவல் ஆய்வாளர் சுகுமாரன் வழக்கு பதிந்து, வீரதெய்வத்தை கைது செய்தார்.
Advertisement