விதிமீறி மது விற்பனை:25 பாட்டில்கள் பறிமுதல்
மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் விதிமீறி மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 பாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் அரசு மதுக்கடைகள் மூடிய பிறகு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து சுப்பிரமணியபுரம் முத்து பாலம், தெற்குவாசல், செல்லூர் குலமங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுக்கடை அருகே போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மது விற்றதாக குமார், கோகுல்ராஜ், மாரிமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடமிருந்து 25 பாட்டில்களும், பணமும் கைப்பற்றப்பட்டன.