தொழிலாளியை மிரட்டியதாக 4 பேர் கைது
தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன்காலனியைச் சேர்ந்த பெத்தனசாமி மனைவி மாரியம்மாள்(38). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் முருகன்(47) என்பவரிடம்
தேனி அல்லிநகரத்தில் செங்கல் காளவாசல் தொழிலாளியை தாக்கியதாக ஞாயிற்றுக்கிழமை 4 பேரை அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம், ஒண்டிவீரன்காலனியைச் சேர்ந்த பெத்தனசாமி மனைவி மாரியம்மாள்(38). இவர், சில ஆண்டுகளுக்கு முன் பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் மகன் முருகன்(47) என்பவரிடம் ரூ.63 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு, அவரது செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்தாராம், கடந்த 6 மாதங்களாக முருகனின் காளவாசலுக்கு வேலைக்கு போகாமல் இருந்த மாரியம்மாள், சில நாட்களுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த பரமன் என்பவரது காளவாசலுக்கு வேலைக்குச் சென்றாராம்.
இதனால், முருகன், அவரது மனைவி லதா(37), இதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி நித்யா(23), பெரியகுளம் எஸ்.பி.ஐ.காலனியைச் சேர்ந்த ஜெயக்கொடி(60) ஆகியோர் தன்னை ஜாதியை குறிப்பிட்டு திட்டி, முன் பணமாக பெற்ற தொகையை உடனடியாக திருப்பித் தருமாறு மிரட்டியதாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிந்து முருகன், லதா, நித்யா, ஜெயக்கொடி ஆகியோரை கைது செய்தனர்.
Advertisement