பண்ருட்டி, புதுப்பேட்டையில் பாஜகவினர் கைது
பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்களன்று பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாகச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக பிரமுகர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திங்களன்று பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியாகச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பேட்டையில் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாறன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தினர். இவர்களை புதுப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேப்போல, பண்ருட்டியில் மாவட்ட அமைப்புச் செயலர் செல்வம் தலைமையில் 25 பேர் ஊர்வலமாகச் சென்று கடைகளை மூட வலியுறுத்தியதை அடுத்து, அவர்களை பண்ருட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.