முகப்பு
தற்போதைய செய்திகள்

வாகனம் மோதியதில் முதியவர் சாவு.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.கோபியை அடுத்த கொளப்பலூர் அம்மன்கோயில் பதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(65). கூலி

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:54 PM
பகிர்:

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

கோபியை அடுத்த கொளப்பலூர் அம்மன்கோயில் பதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(65). கூலி தொழிலாளி. இவர் கொளப்பலூரிலிருந்து அம்மன்கோயில் பதி நோக்கி ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்தகாயமடைந்த  சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து கோபி பொறுப்பு இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →