முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவில்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில், கூலித் தொழிலாளி காயமடைந்தார்.

Updated On : 24 ஜூலை, 2013 at 12:06 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:25 PM

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை முன்னாள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது அரசு விரைவு பேருந்து மோதியதில், கூலித் தொழிலாளி காயமடைந்தார்.

கயத்தாறு சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் வடிவேல்(43). கூலித் தொழிலாளியான இவர், மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, இடைசெவல் அருகே உள்ள தனியார் பள்ளி முன்பு சென்று கொண்டிருந்த போது, திருநெல்வேலியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த வடிவேல் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம்.

Advertisement

இதில் வடிவேல் பலத்த காயமடைந்தார். தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற நாலாட்டின்புத்தூர் காவல் நிலைய போலீஸார் காயமடைந்தவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, அரசு விரைவு பேருந்து ஓட்டுநர் திருமங்கலத்தையடுத்த கல்லிக்குடி அஞ்சல் சோழம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமாரிடம்(34) விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.