முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறப்பு புலானாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு சமதா கட்சி பாராட்டு!

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் இம்மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் தமிழகஅரசு இரும்பு கரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:55 PM
பகிர்:

சேலம் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கை சிறப்பு புலானாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தமிழக சமதா கட்சி மாநிலத் தலைவர் த.தங்கவேல்நாடார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் ஆகியோர் இம்மாதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பதில் தமிழகஅரசு இரும்பு கரம் கொண்டு செயல்பட வேண்டும். சிறுபான்மையினர் வாக்கு வங்கியை மனதில் கொண்டு சில கட்சிகள் பெரும்பான்மையினரை கண்டு கொள்லாமல் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கின்றன. அந்த வரிசையில் தமிழகஅரசும் சேர்ந்துவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

தொண்டு மனப்பான்மை கொண்ட பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் இருப்பதாக கூறும் தமிழக முதல்வர், இந்து மக்கள் வாய் மூடி பய உணர்வால் பீதியடைந்து, உரிமைகள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற மனநிலையில் உள்ளனர் என்பதை மனதில் கொள்ள வேண்டும். பொருளாதார, கல்வி, சமூக நிலைகளில் பின்தங்கிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி, அவர்களை கொலைகாரகளாகவும், தவறுகளுக்கு துணை போகிறவர்களாகவும் ஆக்கும் செயல் தமிழகத்தில் அதிகரி்த்து வருகிறது. எனவே தமிழகஅரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என த.தங்கவேல்நாடார் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →