எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: மோசடி நபருக்கு வலைவீச்சு
கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மகன் முருகேசனுக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி தருவதாகக் கூறிய நடுவனூரைச் சேர்ந்த
கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்.இவர் தனது மகன் முருகேசனுக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்டு வாங்கி தருவதாகக் கூறிய நடுவனூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம் ரூ.6 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் சீட்டு வாங்கி தராமல் தாமதப்படுத்தி வந்துள்ளார்.மேலும் பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளார். இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அவரது புகாரின் பேரில் எஸ்.ஐ.சிவன் வழக்குப் பதிவு செய்து கமலக்கண்ணனை தேடி வருகின்றனர்.