சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
வேப்பங்குப்பம் அருகே சாராயம் விற்பனை செய்த முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் அருகே சாராயம் விற்பனை செய்த முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் போலீஸார் நடத்திய திடீர் சோதனையின் போது அகரம் கீழ்காலனி பகுதியை சேர்ந்த சுப்புரு என்கிற சுப்பிரமணி (50) சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.