கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது..
அவனியாபுரத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவனியாபுரம் காவல்நிலையம் எஸ்.ஐ கலையரசி தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை இரவு
அவனியாபுரத்தில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
அவனியாபுரம் காவல்நிலையம் எஸ்.ஐ கலையரசி தலைமையிலான போலீசார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது பாப்பானோடை தரைப்பாலம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.அவர்களை சந்தேகித்து போலீஸார் சோதனையிட்டபோது கத்தி,அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்துள்ளனர்.இதையடுத்து கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் கூடியதாக வழக்கு பதிவு செய்து அவனியாரம் 3 மாடி காலணியை சேர்ந்த துரை(எ)துரைப்பாண்டி(31),சிந்தாமனி யை சேர்ந்த சின்னான்(37),வைக்கம் பெரியார்நகரை சேர்ந்த மாயக்காளை(38),திலீபன் (24),வில்லாபுரத்தை சேர்ந்த பூவலிங்கம்(24)ஆகிய 5 பேர்களை கைது செய்தனர்.