இலங்கை அகதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்( வயது 43).இவர் வெடிபொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன்களுடன் காரில்
இலங்கை அகதி சௌந்தராஜன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வித்தித்து நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி கே.கே. நகர் மாதவன் சாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் சௌந்தராஜன்( வயது 43).இவர் வெடிபொருட்கள் மற்றும் சேட்டிலைட் போன்களுடன் காரில் வந்தபோது நாகை மாவட்டத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு நாகை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படது.அதில் குற்றவாளி சௌந்தராஜனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ.3 ஆயிரம் அபராதமும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.