முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் 95 பவுன் நகை கொள்ளை

தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனியில் வசிப்பவர் சீலன். இவர் தனது  மகனை பள்ளியில்  சேர்ப்பதற்காக கடந்த 2ம் தேதி சிவகங்கை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:02 PM
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்டேட்பாங்க் காலனியில் வசிப்பவர் சீலன். இவர் தனது  மகனை பள்ளியில்  சேர்ப்பதற்காக கடந்த 2ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்குச் சென்றிருந்தார். பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீட்டைத் திறக்க முயன்றபோது, அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததும், வீட்டில் வைத்திருந்த 95 பவுன் நகை ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து போலீஸில் புகார் செய்தார்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.