தற்போதைய செய்திகள்

தூங்கிகொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் திருட்டு

மன்னார்குடி வட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள சித்தமல்லியில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த பவுன் சங்கிலி,வளையல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுயிருப்பது

SIVA

மன்னார்குடி வட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்துள்ள சித்தமல்லியில் வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த பெண் அணிந்திருந்த பவுன் சங்கிலி,வளையல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுயிருப்பது தெரியவந்தது.

சித்தமல்லி அக்ரஹாரத்தெரு செல்லும் சாலையை சேர்ந்தவர் பாலசுந்தரம்.இவரது மகன் பாலகிருஷ்ணன் வெளிநாட்டில் உள்ளார்.பாலசுந்தரம் வெளியூர் சென்றுயிருந்த நிலையில் வீட்டில் அவரது மனைவி தமிழரசி,மருமகள் ஈஸ்வரி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டு வேலைகளை முடித்து விட்டு  நேற்று(திங்கள்கிழமை) இரவு தமிழரசியும்,ஈஸ்வரியும் தூக்கிவிட்டு இன்று விழித்து பார்த்த போது ஈஸ்வரி அணிந்திருந்த ஆறு பவுன் சங்கிலி,ஆறு பவுன் கை வளையல்கள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஈஸ்வரி பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.சம்பவயிடத்தை போலீஸார் மேம்ப நாய் சோதனையும்,தடய ஆய்வும் செய்தனர்.மேலும் போலீஸார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

மம்சாபுரம் பேரூராட்சியில் போலி ரசீது தயாரித்து ரூ.32 லட்சம் கையாடல்: 8 போ் மீது வழக்கு

காசோலை மோசடி வழக்கில் ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT