முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:05 PM
பகிர்:

பழனி அருகே தனியே இருந்த பெண்ணை ஆபாசமாக பேசி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

பழனி அருகே புலிக்கோட்டையூரை சேர்ந்தவர் திருமலைசாமி மனைவி வீரம்மாள்(33). கணவர் திருமலைசாமி கடந்த சிலமாதம் முன்பு இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேவுகபெருமாள் மகன் ரங்கநாதன்(42)  என்பவர் வீரம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.  தவிர, அவரை ஆபாசமாக பேசியும், கொலைமிரட்டலும் விடுத்ததால் மனஉளைச்சல் ஏற்பட்ட வீரம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார்.  வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரங்கநாதனை கைது செய்து ரிமாண்ட் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.