முகப்பு
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் அதிமுக கிளைச் செயலாளர் மரணம்: 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு

சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற அதிமுக கிளைச் செயலாளர் மரணமடைந்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:07 PM
பகிர்:

சிதம்பரம் அருகே தனியார் பஸ் ஒன்று மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற அதிமுக கிளைச் செயலாளர் மரணமடைந்தார். இதனால் அப்பகுதியில் மக்கள் கூடியதால் சுமார் 30 நிமிடங்கள் சிதம்பரம்-கடலூர் சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரத்தை அருகே உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40). அதிமுக கிளைக்கழகச் செயலாளராக உள்ள இவர் இன்று காலை கடலூர் சாலையில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று அவரது மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குமார் இறந்தார். தகவல் அறிந்த கிராம மக்கள் சாலையில் கூடியதால் சிதம்பரம்- கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →