பண்ருட்டி அருகே பள்ளி மாணவி பலாத்காரம்
பண்ருட்டி வட்டம் கருக்கை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சித்ரா(14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கருக்கையில் இருந்து தனது மாமா
பண்ருட்டி வட்டம் கருக்கை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் சித்ரா(14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்கிருக்கும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் கருக்கையில் இருந்து தனது மாமா வீட்டிற்கு டிராக்டரில் சென்றபோது,ஆத்திரிகுப்பம் என்ற இடத்தில் டிராக்டர் பழுதாகி நின்றது.அப்போது அங்கு பைக்கில் வந்த கருக்கையைச் சேர்ந்த தணிகைவேல்(40) என்பவர் சித்ராவிடம் மாமா வீட்டில் விடுவதாக கூறி அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து காடாம்புலியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.