முகப்பு
தற்போதைய செய்திகள்

வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்து : மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்சரகம் உப்பூர் கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையோரமாக இருந்த மகாலிங்கம் என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாகப் புகுந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:09 PM
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்சரகம் உப்பூர் கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையோரமாக இருந்த மகாலிங்கம் என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாகப் புகுந்தது.

அதில், வீட்டுக்குள் இருந்த மகாலிங்கத்தின் மனைவி பானுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த செல்வரத்தினம் மகன் சபரிவாசன் (15) அதே ஊரில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →