தூங்கிக் கொண்டிருந்த நபருக்கு கத்திக்குத்து!
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரஅரசு (35). இவரது மனைவி ரதிதேவி சனிக்கிழமை இரவு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வீரஅரசு மட்டும் தனியாக படுத்து
சிதம்பரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நபரை, இரு மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரஅரசு (35). இவரது மனைவி ரதிதேவி சனிக்கிழமை இரவு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வீரஅரசு மட்டும் தனியாக படுத்து தூங்கியுள்ளார். அப்போது இரு மர்ம நபர்கள் வீட்டின் பின்புறக்கதவை உடைத்து உள்ளே புகுந்து மின்சப்ளையை துண்டித்து வீரஅரசை கத்தியால் சரமாரியாக குத்துவிட்டு தப்பிஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் வீரஅரசை அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வீரஅரசு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வீரஅரசின் மனைவி ரதிதேவி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.