முகப்பு
தற்போதைய செய்திகள்

மருந்து கடை ஊழியர் கொலை வழக்கில் மனைவி, கள்ளகாதலன் கைது

சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கல்பனா(28) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி அன்று முதலாம் ஆண்டு திருமண நாளை

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:13 PM
பகிர்:

சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(30). இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கல்பனா(28) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 1 ம் தேதி அன்று முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் வகையில் கடலூர் சென்றுவிட்டு திரும்பி கொண்டிருக்கையில் ராசாபாளையம் அருகே சீனிவாசனை மர்ம நபர்கள் கொலை செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக தனிபடை அமைத்து போலீஸார் விசாரனை நடத்தினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 6 ம் தேதி தினேஷ்பாபு என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.விசாரணையில் சீனிவாசனை மனைவி கல்பனாவும்,தினேஷ்பாபுவும் சேர்ந்தே கொலை செய்திருப்பது தெரியவந்தது.கொலை செய்ததும் தனது நகைகள் அனைத்தையும் தினேஷ்பாபுவிடம் கொடுத்து விட்டு, வழிப்பறிக்காக சிலர் தன் கணவனை கொலை செய்ததாக நாடகம் ஆடியது தெரியவந்தது.இதனையடுத்து கல்பனாவை போலீஸார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →