காசோலை மூலம் ரூ.2லட்சம் பணம் கையாடல்: அண்ணாமலைப் பல்கலை. சூப்ரண்டன்ட் தற்காலிக பணி நீக்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல அலுவலகத்தில் பணியாற்றுபவர் சீனுவாசன். இவர் காசோலையை திருத்தி அதன் மூலம் ரூ 2 லட்சம் தொகை பணம் கையாடல் செய்தது விசாரணையில்
காசோலை மூலம் ரூ 2 லட்சம் பணத்தை கையாடல் செய்த அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுநிலை கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல அலுவலகத்தில் பணியாற்றுபவர் சீனுவாசன். இவர் காசோலையை திருத்தி அதன் மூலம் ரூ 2 லட்சம் தொகை பணம் கையாடல் செய்தது விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் உத்தரவின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது இலாகா வாரியான விசாரணை நடைபெற்று வருகிறது.