தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் தொழிலாளர்களுக்கு இடையே மோதல்
தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் இரு பிரிவு தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர்
தூத்துக்குடியில் சங்கு குளிக்கும் இரு பிரிவு தொழிலாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் கடலில் மூழ்கி சங்கு எடுக்கும் தொழிலான சங்கு குளிக்கும் தொழிலில், உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் என இரு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை இரு பிரிவு தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.