டாஸ்மாக் குடோன் ஊழியர் கோவில் குளத்தில் சேற்றில் சிக்கி பலி
கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் வசந்தகுமார். இவர் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் குடோனில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தி(31) என்ற மனைவியும்,
தற்போதைய செய்திகள்டாஸ்மாக் குடோன் ஊழியர் கோவில் குளத்தில் சேற்றில் சிக்கி பலி
கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் வசந்தகுமார். இவர் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் குடோனில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தி(31) என்ற மனைவியும்,
கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள எல்லையம்மன் கோவில் குளத்தில் குளிக்க சென்ற டாஸ்மாக் குடோன் ஊழியர் வசந்தகுமார்(37) சேற்றில் சிக்கி இன்று பலியானார்.
கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் வசந்தகுமார். இவர் சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் குடோனில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வசந்தி(31) என்ற மனைவியும், லோக்நாத்(11), ரூபன்(7) என்ற மனைவியும் உள்ளனர்.வசந்தகுமாரின் தம்பி மகன்களுக்கு புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள குலதெய்வ கோவிலான எல்லையம்மன் கோவிலில் இன்று மொட்டை அடித்து காது குத்த ஏற்பாடுகள் நடைபெற்ற வந்த நிலையில் , இன்று காலை அந்த வேலைகளை பார்க்க கோவிலுக்கு சென்ற வசந்தகுமார், கோவில் குளத்தில் குளிக்க உள்ளே இறங்கினார்.
அப்போது அவர் குளத்தில் சேறான பகுதியில் சிக்கி உள்ளே மூழ்கினார். அப்போது அருகில் யாரும் இல்லாததால் அவரை காப்பாற்ற இயலவில்லை. தொடர்ந்து குளத்தில் குளிக்க போனவரை காணாது அவரது உறவினர்கள் தேடியும் கிடைக்காமல் தீயணைப்பு துறையினர் வந்து குளத்தில் இருந்து வசந்தகுமாரின் உடலை மீட்டனர்.சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் முனிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதே குளத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 3 இளம்பெண்கள் மூழ்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.