திருத்துறைப்பூண்டி அருகே மணல் டிராக்டர் மோதி ஒருவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே சத்திமேடு கிராமத்தில் டிராக்டரில் மணல் அள்ளி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால்
திருத்துறைப்பூண்டி அருகே சத்திமேடு கிராமத்தில் டிராக்டரில் மணல் அள்ளி எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதால் நேற்று இரவு நேரத்தில் மணல் எடுத்துக் கொண்டு சத்திமேடு நாகலுடையான் இருப்பு பகுதியைச் சேர்ந்த நாகமுத்து என்பவரின் மகன் குமார் டிராக்டரை வேகமாக இயக்கிச் சென்றுள்ளார். டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்ற போது சத்திமேடு பள்ளிவாசல் அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து, டிராக்டர் பின் சக்கரம் உடல் மீது ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.