முகப்பு
தற்போதைய செய்திகள்

பெண்மணியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் இருவர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கனகவல்லி(55) நேற்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக

தற்போதைய செய்திகள்

பெண்மணியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் இருவர் மீது வழக்கு

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கனகவல்லி(55) நேற்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:32 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த கனகவல்லி(55) நேற்று(வியாழக்கிழமை) தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பார்த்திபன், சீனிவாசன் ஆகிய இருவரை கவரப்பேட்டை போலீஸார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலச்சேரி பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுரங்கத்தின் மனைவி கனகவல்லி. பொன்னுரங்கத்திற்கும் அவரது அண்ணன் செல்வராஜிற்கும் கடந்த 2 வருடமாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் அடிக்கடி வாய்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) மாலை இதே பிரச்சனை எழுந்த போது செல்வராஜின் மகன்கள் பார்த்திபன் மற்றும் சீனிவாசன் பொன்னுரங்கத்தின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த கனகவல்லியிடம் வாய்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த கனகவல்லி வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து உண்டதில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தொடர்ந்து பார்த்திபன் மற்றும் சீனிவாசன் தகாத வார்த்தைகளால் பேசியதால் தான் கனகவல்லி மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டதாகவும், அவரை தற்கொலைக்கு காரணமான இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கனகவல்லியுின் மகன் முனிவேல் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள கவரப்பேட்டை போலீஸார் தலைமறைவாகி உள்ள பார்த்திபன் மற்றும் சீனிவாசனை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →