முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப் பூண்டி அருகே கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி அருகே காடுவாகொத்தமங்கலம் கிராமத்தில் பவுல்ராஜ் என்பவரின் மகன் செந்தில் குமார் (30), அவரின் மனைவி கல்பனா (25)  இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:33 PM
பகிர்:

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி அருகே காடுவாகொத்தமங்கலம் கிராமத்தில் பவுல்ராஜ் என்பவரின் மகன் செந்தில் குமார் (30), அவரின் மனைவி கல்பனா (25)  இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

செந்தில்குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். விடுமுறை தினங்களில் ஊருக்கு வருவாராம். அப்போது அடிக்கடி அவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று தகராறு அதிகரித்த நிலையில் இருவரும் விஷம் குடித்துள்ளனர். பின்னர் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்பனாவும், செந்தில்குமார் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →