முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே புதைக்கப்பட்ட சிறுவன் உடல் தோண்டியெடுப்பு: கிராம மக்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை

திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தில் மக்கள் முன்னிலையில் அண்மையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:34 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே எடையூர் கிராமத்தில் மக்கள் முன்னிலையில் அண்மையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

கிராமத்தின் முக்கியப் பிரமுகர்ள், அதிகாரிகள் முன்னிலையில் சிறுவனின் உடல் தோண்டி எடுக்கபட்டு, அந்த இடத்தில் துணிப் பந்தல் அமைத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  விழுப்புரம் - முண்டியம்பாக்கத்தில் இருந்து மருத்துவக் குழு வந்திருந்து, பரிசோதனை மேற்கொண்டது. அப்போது, சிறுவனின் எலும்புகள் நொறுங்கியிருந்தன என்று பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் குழு கூறியதாக வட்டாட்சியர் கிருஷ்ணன் கூறினார். எலும்புகள் நொறுங்கியிருந்ததால், அது விபத்து என்று தெரிவதாக அவர் கூறினார். ஆனால், பொதுமக்களோ, இரு தினங்களுக்கு முன்னர் குற்றவாளிகள் இது குறித்துக் கூறியபோது, சிறுவனின் தலை நசுங்கிவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், பிரேதப் பரிசோதனையின் போது, சிறுவனின் உடலில் தலை நன்றாக இருந்தது. ஆனால், குடல் பகுதி இல்லை கண் இல்லை; வெறும் எலும்புக் கூடாக இருந்தது என்றனர் கிராம மக்கள். இது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, திருக்கோவிலூர் அருகே எடையூரில் டிராக்டரில் பயணித்த சிறுவன் அரவிந்த், மர்மமான முறையில் உயிரிழந்தார். சிறுவனின் உடலை அவரது உறவினர்களுக்கும், போலிஸாருக்கும் தெரியாமல் காட்டில் புதைத்ததாக 2 பேர் புதன்கிழமை போலீஸில் சரணடைந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →