சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்கலை மாணவர்கள் ரயில் மறியல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் இன்று இலங்கைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் புல மாணவர்கள் இன்று இலங்கைக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் கலை புல மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிறகு அங்கிருந்து ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த மாணவர்கள், ஐ.நா.வின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும், இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு வந்த
Advertisement
திருச்சி - சென்னை சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பிறகு, சோழன் விரைவு ரயில் 15 நிமிடம் காலதாமதமாக 12.50க்கு புறப்பட்டுச் சென்றது.