முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வேளாண் உதவி அலுவலர் சிறைபிடிப்பு

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தன்குடி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும், சிறு விவசாயிகள் பெயர்கள் நிவாரணப் பட்டியலில் இடம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:42 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பயிர் நிவாரண கணக்கெடுப்பு சரியாக எடுக்கவில்லை என கூறி வேளாண் உதவி அலுவலரை கிராமமக்கள் 2 மணி நேரம் சிறைபிடித்து பின்னர் விடுவித்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள நக்கரவந்தன்குடி கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் நிவாரணம் வழங்க கணக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும், சிறு விவசாயிகள் பெயர்கள் நிவாரணப் பட்டியலில் இடம் பெறாததை கண்டித்தும் அக்கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேளாண் உதவி அலுவலர் செல்வராஜை மதியம் 2 மணி முதல் சிறைபிடித்து கேரோ செய்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு விடுவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →