ராஜபட்சவைக் கண்டித்து சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ரயில்மறியல்
இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று
இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். இதனால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.