முகப்பு
தற்போதைய செய்திகள்

சேரன்மகாதேவியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடை

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சேரன்மகாதேவி எம்.கே.டி. தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். மர்ம நபர்கள் சுப்பிரமணியன் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு திருட முயற்சி செய்துள்ளனர். வீட்டில் விலை உயர்ந்த தங்கம் உள்ளிட்ட  பொருட்கள் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் சென்று விட்டனர்.

சேரன்மகாதேவி அருகே செல்விபுரத்தில் தனியார் கல்லூரி ஊழியர் வீடு, அருகில் மற்றொரு வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த அழைப்பு மணியை தொடர்ந்து அடித்தனராம். சேரன்மகாதேவியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிய சம்பவம், அழைப்பு மணியை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →