முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சாத்தூர் நீதிமன்றங்களுக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Updated On : 8 மார்ச், 2013 at 1:13 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:14 PM

சாத்தூர் நீதிமன்றங்களுக்கு இன்று காலை வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு தொலைபேசி அழைப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து சாத்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்பட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குற்றவியல் நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்படுகிறது.

Advertisement

உரிமையியல் நீதிமன்றத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு வழக்கம் போல பணிகள் துவங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.