சாத்தூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் நீதிமன்றங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பை அடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இன்று காலை ஒரு ரகசிய தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், சாத்தூர் நீதிமன்றங்களில் இன்று காலை வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
இதையடுத்து, சாத்தூர் நீதிமன்றங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சாத்தூர் முக்கியச் சாலையில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் எண் 1, குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ஆகிய இரண்டு நீதிமன்றத்திலும் வழக்குரைஞர்கள், காவல்துறையினர், பொதுமக்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களைச் சுற்றி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்படவில்லை.
Advertisement
நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் முக்கியச் சாலையில் நின்றிருப்பதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்படுகிறது.