விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து பணியாளர்கள், வழக்குரைஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:14 PM
விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்துக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை அடுத்து நீதிமன்றத்தில் இருந்து பணியாளர்கள், வழக்குரைஞர்கள் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்ற வளாகம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கே வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை அடுத்து இன்று விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் வாய்தா பெறப்பட்டுள்ளன.