பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!
ஏப். 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
ஸ்ரீநகர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொலை செய்தனா். இந்த சம்பவத்தையடுத்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் இந்திய விமானப் படை குண்டுகளை வீசி அழித்தது.
பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து ஜம்மு-காஷ்மீரில் பெரும்பாலான சுற்றுலா மையங்கள் மூடப்பட்டு, இயல்புநிலை திருபியதும், அவை படிப்படியாக திறக்கப்பட்டன.
Advertisement
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாளையொட்டி காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.