பஹல்காம் தாக்குதல்: ஹபீஸ் சயீதுக்கு பிணையில்லா பிடியாணை!
லஷ்கர் - ஏ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு பிணையில்லா பிடியாணை பிறப்பித்துள்ளது பற்றி..
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக லஷ்கர் - ஏ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத பிணையில்லா பிடியாணையை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலம், பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள், ஒரு உள்ளூா் கிராமவாசி ஆகிய 26 போ் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு
தி ரெசிஸ்டென்ஸ் பிரான்ட் (டிஆா்எஃப்) துணை அமைப்புகள், பஹல்காம் தாக்குதலுக்குத் திட்டமிட்டுச் செயல்படுத்தியது.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. இதில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் தலைவரான சர்வதேச பயங்கரவாதி ஹபீய் சயீத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. முதல் தகவல் அறிக்கையில் 8-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிணையில்லா பிடியாணையைப் பிறப்பித்துச் சிறப்பு நீதிபதி பிரேம் சாகர் உத்தரவைப் பிறப்பித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.