முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. மாணவர்களை தொடர் உண்ணாவிரதம்: போலீஸார் குவிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சென்னை

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:35 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவள்ளல் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ராஜபட்சேவிற்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடங்கினர். பின்னர் மாலை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து சுமார் 100 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரி ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →