சிதம்பரத்திற்கு வழிதவறி வந்த தேசியப்பறவை மயில் மீட்பு!
சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்திற்கு ஆண் மயில் மயில் ஒன்று வழிதவறி வந்தது. அப்போது நாய்கள் அந்த மயிலை துரத்திய போது ஊராட்சி மன்றத் தலைவர்
சிதம்பரம் அருகே வழி தவறி வந்த தேசியப் பறவையான ஆண் மயிலை வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்திற்கு ஆண் மயில் மயில் ஒன்று வழிதவறி வந்தது. அப்போது நாய்கள் அந்த மயிலை துரத்திய போது ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னுசாமி மயிலை காப்பாற்றி அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் சென்று மயிலை பெற்று அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.