முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூரில் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மார்ச், 2013 at 3:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:19 PM

சாத்தூரில் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நீதிமன்றங்களில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வெம்பக்கோட்டை,ஆலங்குளம் காவல் நிலைய சரக வழக்குகள் சாத்தூர் குற்றவியல் பதிவு செய்யபட்டு வருகின்றன. ஆலங்குளம், வெம்பக்கோட்டை குற்ற வழக்குகளை மட்டும் சிவகாசி நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சிவகாசி வழக்குரைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்தூரில் ஆலங்குளம்,வெம்பக்கோட்டை வழக்குகளை சிவகாசி நீதிமன்றத்துக்கு மாற்ற கூடாது என, சாத்தூரில் உள்ள வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கபட்டது. இதையடுத்து புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று வழக்குரைஞர்கள் சங்க தலைவர் விஸ்வநாத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாத்தூர் குற்றவியில் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்ட்டனர். வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பால் நீதிமன்ற பணிகளில் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.