முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் தீவிரமடையும் மாணவர்களின் போராட்டம்

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம், அரசு ஐடிஐ, பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் என இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:52 AM
பகிர்:

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம், அரசு ஐடிஐ, பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் என இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஈரோட்டில் கருங்கல்பாளையம் பாட்டாளி படிப்பகம் மாணவர்களும், அரசு ஐடிஐ மாணவர்களும், 4க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களும் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு ரயில் நிலையம் மற்றும் ஈரோடு பேருந்து நிலையத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் பல்லடம், கோபி, உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.