திருச்சி திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:23 PM
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் லாரி ஓட்டுநர்கள், டேங்க் லாரி உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே திரண்ட அவர்கள், பணிக்குச் செல்லாமல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இலங்கைப் பிரச்னைக்காக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால், திருச்சி மதுரை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.